tamilnadu

தஞ்சையில்  சிஐடியு முன்னணி  ஊழியர் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தஞ்சாவூர், மே 27- தஞ்சாவூர் பாலாஜி நகர் சிஐடியு அலுவலகத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக தஞ்சை நகர் கிளை, புறநகர் கிளை, ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, திருவையாறு கிளைகள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தஞ்சை கிளை ஆகிய வற்றின் சிஐடியு முன்னணி ஊழியர் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.  சங்கத் தலைவர் பி. முருகன் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “எதிர்காலத் தில் போக்குவரத்து கழகம் மற்றும் சமூக பிரச்சனைக ளுக்கு எதிரான போராட்டங்க ளில் இணைந்து செயல்படு வது என முடிவு எடுக்கப் பட்டது. காரல் மார்க்ஸ், முருக சக்தி, செண்பகமூர்த்தி, கர்ணன், சௌந்தர்ராஜன், முத்துக்குமார், முருகே சன் ஆகியோர் ஒருங்கி ணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.