tamilnadu

img

தடையை மீறி திருமணம் சிதம்பரம் தீட்சிதர்கள் மீது புகார்

சிதம்பரம் ஏப். 7- உலக நாடுகளில் பெரும் உயிர்  சேதத்தை ஏற்படுத்தி வரும்  கொரோனா வைரஸ் தொற்றிலி ருந்து தப்பிக்க ஒரே வழி சமூக  பரவலை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சி களும் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது. மீறினால் மண்ட பங்களுக்கு சீல் வைக்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே நிச்ச யக்கப்பட்ட திருமணங்கள் ஆங்காங்கே உள்ள கோயில்  களின் வெளியே மணமகள், மண மகன் அவரது பெற்றோர்கள் மட்டும் கலந்து கொண்டு மிகவும்  எளிமையான முறையில் திரு மணம் நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், சிதம்பரம்  வீதி யிலுள்ள மெ.செ மஹால் திருமண  மண்டபத்தில் சிதம்பரம் கோயில்  திட்சிதர்களின் மகன், மகளுக்கு திருமணம் மண்டபத்தின் கதவு களை அடைத்துக் கொண்டு வெளியே தெரியாதவாறு நடை பெற்றது. இந்நிகழ்ச் சியில் மண்டபத்தின் உள்ளே 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முகக் கவசம் அணியாமல்? கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒலிபெருக்கி மூலம் மண்ட பத்தில் உள்ளவர்களை வெளியே  வரச் சொன்னார்கள். ஆனால்  அவர்கள் கதவை பூட்டிக் கொண்டு திறக்காம இருந்தனர். கதவை திறக்கவில்லை என்றால் உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து உள்ளே இருந்தவர்கள் சிலர் மட்டும் வெளியே வந்தனர்.  144 தடையை மீறி ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களை கூட்டமாக கூட்டியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு காவல்துறையினர் நகர்ந்தனர்.

அதனைதொடர்ந்து தீட்சி தர்கள் மண்டபத்தின் கதவுகளை  பூட்டிக் கொண்டு உள்ளே இருந்த 100-க்கும் மேற்பட்டவர் களை மண்டபத்திற்குள் வைத்து திருமணத்தை நடத்தி னர். மண்டபத்திற்கு வெளியே வாழை மரம், தோரணம், மின்  விளக்குகளால் அலங்கரித்தி ருந்தனர்.