tamilnadu

img

ரத்த தான நிகழ்ச்சி 

 கும்பகோணம், ஆக.22- உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோகிராபர் அசோசியன் சார்பாக குடந்தை அரசு மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கி யில் கும்பகோணம் புகைப்படம் மற்றும் வீடியோகிராபர் கலைஞர்கள் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் ரத்ததானம் செய்தனர். தொடர்ந்து திருச்சேறை கிராமத்தில் இயங்கி வரும் ஆதரவற்ற ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய வர்களுக்கு இனிப்பு வழங்கியும் காப்பகத்திற்கு 100 கிலோ அரிசி வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கும்பகோணம் புகைப்பட மற்றும் வீடியோ கிராபர் சங்க தலைவர் டீசெல்லபாண்டியன் தலைமை யில் வைத்தார். செயலாளர் ஆர்செந்தில்ராஜ் ஆலோசகர் ராஜாமணி மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சங்க பொருளாளர் எம்கேசிவா நன்றி கூறினார்.