tamilnadu

கொரோனாத் தொற்றை தவிர்க்க மீன் பிடிக்கச் செல்வதில்லை: மீனவர்கள் முடிவு

தஞ்சாவூர், ஜூலை 22- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர் சங்க அலுவலகத்தில், தஞ்சை மாவட்ட விசைப்படகு மற்றும் மல்லிப்பட்டி னம், கள்ளிவயல் தோட்டம், சேதுபா வாசத்திரம் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  மீனவர் பேரவை மாநில பொதுச் செயலா ளர் தாஜூதீன் தலைமை வகித்தார். மல்லி ப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத் தலை வர் வடுகநாதன், நாட்டுப்படகு மீனவர் சங்கத்  தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.  இக்கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தின் பல  பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள மீன்  சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் அதிக ளவில் வருகின்றனர்.

இதனால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே அவற்றை தவிர்க்கும் விதமாக, விசை ப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் புதன்கி ழமை முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்வ தில்லை எனவும், கடைவீதி வியாபார நிறு வனங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.   மேலும், கடற்கரை பகுதிகளில் நோய்த்தொற்று இல்லாமல் தடுக்க, சுகா தார அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வா கம் மூலம் கிருமிநாசினி தெளிக்கவும், மக்க ளுக்கு தேவையான கபசுரக் குடிநீர், நில வேம்பு கசாயம், சளி, ஜூரம் மாத்திரைகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க மாவட்ட  ஆட்சியரை கேட்டுக் கொள்வது” என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.