tamilnadu

img

ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் விவசாயம் கடும் பாதிப்பு மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் மனு

 தஞ்சாவூர், ஆக.13- குரும்பைக்குள ஏரி ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சை  ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் சங்க மாவட்ட தலைவர் ஆம்பல் துரை. ஏசுராஜா தலைமையில், நிர்வாகிகள் கோ.திங்கள் கண் ணன், பா.கார்க்கி முருகானந்தம், பா.முத்தமிழ்ச் செல்வன் உள் ளிட்டோர் அளித்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: ஆம்பலாப்பட்டு தெற்கு கிரா மத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 35.82 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட குரும்பைக்குள ஏரி யின் 70 சதவீத பகுதிகளை, தனி நபர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர்.  தற்போது குடிமராமத்து பணி நடைபெற்று வருகிற சூழ்நிலை யில்,  ஏரியின் 70 சதவீத பகுதி களை நில அளவை செய்து ஆக்கி ரமிப்புகளை அகற்ற பொதுப் பணித் துறையிடமும், வருவாய் துறையிடமும், விவசாயிகளும், பாசனதாரர் சங்கமும் நேரடியாக கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய் துள்ள தனி நபர்களுக்கு ஆதர வாக செயல்பட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக ஏரியின் 35.82  ஏக்கர் பரப்பளவு முழுவதை யும், தூர்வாரி முழுமையாக குடி மராமத்து பணிகளை நிறைவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தனிநபர் களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ள குரும்பைக்குள ஏரி ஆக்கி ரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.