tamilnadu

img

தஞ்சை நெட்டி வேலைப்பாடு அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர், மே 14- தஞ்சை நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டு பாரம்பரிய கைவினைப் பொருள்க ளில் ஒன்றான நெட்டி வேலைப்பாடுக ளுக்கு என தனிச் சிறப்பு உண்டு. இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீர் நிலைகளில் விளையும். இதன் நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.  இதை உலர்த்தி, பதப்படுத்தி, தஞ்சாவூர் பெரிய கோவில், மாமல்ல புரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், விவேகானந்தர் பாறை, திரு வள்ளுவர் சிலை என உருவாக்கப் பட்டு விற்கப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதன் வெண்மை வண்ணம் மாறாமல் இருக்கும்.

மாட்டு பொங்கல் அன்று மாடுகளுக்கு மாலையாக தயார் செய்யப்படுகிறது. அரும்பாவூர் மரச் சிற்பம் பெரம்பலூர் மாவட்டம் அரும்பா வூர், மரச் சிற்பத்துக்கு 250 ஆண்டு பழ மையான வரலாற்று சிறப்பு உள்ளது. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், வடபழனி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களின் தேர்கள், இவ்வூரைச் சேர்ந்த கலை ஞர்களால் உருவாக்கப்பட்டது.  தேர் வேலைகள் செய்யும் போது, இவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதமிருப்பது வழக்கம். அத்துடன், ஒரு அடி முதல் 12 அடி வரையிலான பல வகையான சிற்பங்கள் செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து போன்ற வெளிநாட்டினரால் பெரிதும் விரும்பி வாங்கப்படு கின்றன. இயந்திரம் இல்லாமல், உளி, சுத்தியல் உபகரணங்கள் பயன் படுத்தி, சிற்பங்கள் செய்யப்படுவது சிறப்பு.
புவிசார் குறியீடு
பூம்புகார் சார்பில் கடந்த 2013-ல், இந்த இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டு, 2014-ல் தில்லியில் ஏழு நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன்பாக சஞ்சய்காந்தி ஆஜ ராகி வாதாடினார். இதன் தொடர்ச்சி யாக பல்வேறு சட்டப் பணிகளை மேற்கொண்டு கடந்த 2020 ஜனவரி 10-ல், அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.