tamilnadu

img

மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்த்து மார்ச் 23-ல் தொடர் முழக்கப் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 15- சென்னையில் அண்மையில் நடை பெற்ற சிஐடியு 16ஆவது  அகில இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி பேரவைக் கூட்டம், தஞ்சாவூரில் சனிக்கிழமை நடை பெற்றது.  கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ தலைமை வகித்தார். மாநாட்டு முடிவுகளை விளக்கி மாநில துணைத் தலைவர் ஏ. கிருஷ்ண மூர்த்தி விளக்க உரையாற்றினார். மாநி லக்குழு முடிவுகள் மற்றும் எதிர்காலப் பணி கள் குறித்து மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கே.கல்யாணி, மாவட்ட நிர்வாகி கள் இ.டி.எஸ்.மூர்த்தி, கே.அன்பு, த.முரு கேசன், ஆர்.சேகர், எஸ்.செங்குட்டுவன், எம்.கமலம், கே.வீரையன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தையொட்டி சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து, சிஐடியு, விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நடைபெறவுள்ள தொடர் முழக்கப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து இயக்கங்களும், ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் ஒத்து ழைப்பு தர வேண்டும்” என அறைகூவல் விடுக்கப்பட்டது.