tamilnadu

img

அதிராம்பட்டினம் கல்லூரி விழா  

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் நூற்றாண்டு துவக்க விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் நூற்றாண்டு விழாச் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் என்.நல்ல முகமது, இலவச காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி ஏ.அப்துர் ரஹ்மான் மன்பஈ சிறப்பு கல்வி உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை பொருளியல் துறைத்தலைவர் பி.கணபதி தொகுத்தளித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.

;