tamilnadu

img

கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை தொகை ரூ.300 கோடி பாக்கியை தர வேண்டும் தனியார் பள்ளி சங்கத்தினர் வலியுறுத்தல் 

 தஞ்சாவூர், செப்.12- மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, மாணவர்களைச் சேர்த்துக் கொண்ட வகையில் 2018–19ம் கல்வியாண்டுக்குரிய கல்விக் கட்டண பாக்கி 300 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில துணைப் பொதுச் செய லாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து சிறப்புரை யாற்றினார்.  இதில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கெனவே அரசாணைப் பிறப்பித்தது. அந்த வகையில் தமிழகத்தில் இயங்கி வரும் அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, மாணவர்களைச் சேர்த்துக் கொண்ட வகையில் 2018–19ம் கல்வியாண்டுக்குரிய கல்விக் கட்டண பாக்கி 300 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான கட்டணம் இதுவரை வழங்கப்படவில்லை.  அரசு ஒரு மாணவருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் செலவு செய்கிறது. ஆனால், பள்ளிக் கல்வித்துறை 11,500 ரூபாய் தான் தருவதாக அரசாணைப் பிறப்பித்துவிட்டு, 4 மற்றும் 5 ஆயி ரம் ரூபாய் வீதம் மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகை யில் நியாயம். பள்ளிகளுக்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது, ஓராண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கும் முறை உள்ளது.  பழைய பள்ளிகளுக்குக் கட்டட அனுமதி தேவையில்லை என அரசாணையும், நீதிமன்ற ஆணையும் இருக்கின்றன. அதையும் மீறி அரசாணைப் பிறப்பிக்காமல், ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தி, பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.  எனவே, அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக தொடர் அங்கீகாரத்தையும், நிரந்தர அங்கீகாரத்தையும் மூன்று ஆண்டுகளுக்குத் தர வேண்டும். புதிதாகப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரமாட்டோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறோம்.  குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குப் புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குத் தனி இயக்ககம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றார்.  இக்கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் நடராஜன், தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நிர்மலா சந்திர சேகரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.