கும்பகோணம் டிச.4- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட திருநரையூர் சத்யா நகர், விஐபி நகர், ஆதிதிராவிடர் தெரு ஆகிய தெருக்களின் குடி யிருப்பு பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால் வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு மிகவும் அபாய நிலையில் இருந்தன. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.பழனிவேல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டார். இது சம்பந்தமாக தீக்கதிர் செய்தி வெளியானது. இதனையடுத்து பாதிக் கப்பட்ட பகுதிகளில் கும்பகோணம் கோட்டாட்சியர் வீராச்சாமி, வட்டாட்சி யர் பாலசுப்பிரமணியன், திருவிடை மருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் - தனி அலுவலர் சதீஷ்குமார், திருநறை யூர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி செயலர் குருமூர்த்தி ஆகி யோர் சம்பந்தப்பட்ட சத்யா நகரில் முகாமிட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அப்போது பொதுமக்கள் ஆக்கி ரமிப்பிலிருந்த வேலி மற்றும் சுவர்கள் கோட்டாட்சியர் முன்னிலையில் அகற் றப்பட்டு மூடிக்கிடந்த வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. மழை நேரத்தில் இதுபோன்ற சூழ்நிலை அமையாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் தருமையன் மற்றும் ஆனந்தன் உள்ளிட்ட பொதுமக்கள் பணியை மேற்கொண்டனர்.