tamilnadu

தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்  நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை 

 தஞ்சாவூர், செப்.2- தஞ்சை பேராவூரணி அருகே தில்லங்காட்டைச் சேர்ந்த குமார் மனைவி சங்கீதா(32). குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேராவூரணிக்கு தனது தோழியுடன் ஸ்கூட்டியில் காலகம் கைகாட்டி அருகே சங்கீதா சென்ற போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர், சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து தப்பினான். மேலும் இதில் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சங்கீதா நிலை தடு மாறி கீழே விழுந்ததில் அவரும், அவரது தோழியும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்த புகாரில் பேரா வூரணி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.  பேராவூரணி பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்ப வங்கள் நடப்பதால் தனிப்படை அமைத்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தரவும், பெண்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.

;