tamilnadu

img

ஆன்-லைனில் படிக்க வசதியில்லாத மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்...

தஞ்சாவூர்:
பேராவூரணி அருகே மாணவர்களின் நலன்கருதி அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆசிரியர் தமிழரசன் (53). இந்தப் பள்ளியில் படிக்கும்மாணவ, மாணவியர் பெரும்பாலும் பக்கத்துகிராமங்களைச் சார்ந்தவர்கள். மேலும் விவசாய பின்னணியைக் கொண்ட எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் படிக்காதவர்கள். 

கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டில்முடங்கி, கல்வி தடைபட்டது. போதிய வசதியின்றி ஆன்லைனில் பாடம் படிக்க முடியாத நிலையில் மாணவர்கள் தவித்து வந்தனர். இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி,படிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஒன்பதாம்வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு செல்லும்37 மாணவர்களின் நலனுக்காக கடந்த மூன்றுமாதங்களாக அவர்களின் வீடுகளுக்கு சென்றுபாடம் நடத்தி வந்தார். தற்போது, 6 வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை இந்தாண்டு கல்வியாண்டில் சேர்ந்த 27 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்.இது குறித்து ஆசிரியர் தமிழரசன் கூறுகையில், கிராம மாணவர்கள் என்பதால், இன்டர் நெட் வசதி இல்லாமல், ஆன்லைனில் படிக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால், அவர்கள் கல்வி பாதிக்ககூடாது என்பதற்காக வீடுகளுக்கு சென்று பாடம் எடுத்து வருகிறேன். இது மாணவர்களுக்கு மட்டும் அல்ல,அவர்களின் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.