tamilnadu

அரசின் இலவச 3 சக்கர மோட்டார் வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் நடவடிக்கை எடுக்க மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.9- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின்,  மாவட்டக்குழு கூட்டம் கடை ப்பிடித்து, தஞ்சை பாலாஜி நகர் அலுவலகத்தில் நடை பெற்றது.  மாவட்டத் தலைவர் ஏ. பஹாத் முகமது தலை மை வகித்தார். இக்கூட்ட த்தில் சங்கத்தின் மாவ ட்டச் செயலாளர் பி.எம்.இள ங்கோவன், மாநிலக்குழு உறு ப்பினர் டி.வாசுதேவன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். “மாற்றுத் திறனாளி களுக்கு, தமிழக அர சால் இலவசமாக வழங்கப்ப டும் மூன்று சக்கர மோ ட்டார் வாகனம் பெறும் பயனா ளியிடம், ரூ.5 ஆயிரம் லஞ்ச மாகக் கேட்டு வாங்கும் மாற்றுத் திறனாளிகள் நல  மாவட்ட அலுவலர் டி.ரவீந்தி ரன், அலுவலக ஓ.டி. மோ கன்ராஜ் ஆகியோர் மீது தஞ்சை மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தொகுப்பூதியத்தில் பணி யாற்றக்கூடிய அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  மே, ஜூன் மாத ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை, வங்கி கடன் தடையின்றி வழங்கிட வேண்டும் எனவும், மாவ ட்டம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத் திறனா ளிகளையும் சந்தித்து சங்க த்தில் இணைத்து அரசின் நல த்திட்டங்களை பெற்றுத்தர வேண்டும்” என்பன உள்ளி ட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பின்னர் மாற்றுத் திறனா ளிகள் சங்க மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன் தெரிவிக்கையில், “பாப நாசம் ஒன்றியம், உள்ளி க்கடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற மாற்றுத் திறனாளியிடம், இலவச மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்க, ரூ.5 ஆயிரம் நிர்ப்பந்தித்து கேட்டு பெற்றுள்ளனர். இதே போல் பலரிடமும் பணம் லஞ்சமாக பெற்றுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். தவறி ழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.