tamilnadu

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.9- நடைபெற உள்ள மார்ச் 2020 எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பித்தல் குறித்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் சி.தமிழரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் ஜனவரி 27 (திங்கட்கிழமை) முதல் ஜன.31 (வெள்ளிக்கிழமை) வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை Online–ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை செயின்ட் இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் புனித இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் (NODAL CENTRE) சென்று Online–ல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வுகள் சார்ந்த தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்” என கூறப்பட்டுள்ளது.

;