சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வாணையம் நடத்திய, காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 8,888 பணி யிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைகளை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது. தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8, 888 பணி யிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யம் தேர்வுகள் நடத்தியது. இதில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர் கள் அனைவரும் சிகரம் தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும் புகார் எழுந்தது.
முறைகேடு நடைபெற்றி ருப்பதாகக் கூறி சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், நீதிமன்றத்தின் மறு உத்த ரவு வரும் வரை தேர்வு நடை முறையை நிறுத்தி வைக்க கடந்த 20ஆம் தேதி உத்தர விட்டார். தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்ன ரும், அரசின் விளக்கத்தை கேட்கா மலும், தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தேர்வு முறைகேடு குறித்து ஆவணங்களை ஆராயா மல் தேர்வு நடை முறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவு தவறு என்றும், இது தீவிர பின்விளைவுகளை ஏற்ப டுத்தும் என்றும் தெரிவித்தனர்.
தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைத்ததற்கு எந்த கார ணத்தையும் தனி நீதிபதி தன்னு டைய உத்தரவில் விளக்க வில்லை என்பதையும் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியது. இந்த வழக்கில் காவல் துறை யினர் புலன் விசாரணை மேற் கொள்ள வேண்டி இருப்பதால், தமிழக அரசின் மேல் முறை யீட்டை அனுமதிப்பதாகவும், தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்வதாக வும் உத்தரவிட்டனர். மூல வழக்கில் இரு தரப்பு வாதங்களை யும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு உத்தர விட்டு, மேல் முறையீட்டு வழக்கை முடித்துவைத்தனர்.