tamilnadu

img

கடலூர் ஆட்சியர் வீட்டில்  ரூ.20 லட்சம் நகை கொள்ளை

தஞ்சாவூர், மார்ச் 21- தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெ.அன்புச்செல்வன். இவர் கடலூர் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். மேலும் குடும்பத் தோடு அங்கு தங்கி உள்ளார். வீட்டின் காவலுக்காக அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (62) என்பவர் அவரது வீட்டில் தங்கியுள்ளார்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, செல்வம் வீட்டின் முன்பக்கம் படுத்திருந்த போது சில நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சுமார் 55 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற தாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

;