tamilnadu

தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க 15 மருத்துவக் குழுக்கள்

தஞ்சாவூர், ஜூன் 8- கொரோனா தொற்று தற்போது வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருவோரால் அதிகளவில் பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் இணைப்பு கொண்ட 200 படுக்கை தயார் நிலையில் உள்ளது. அதிக எண்ணிக் கையில் நோய் பரவினாலும் கூடுதலாக 800 படுக்கை தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத் தைச் சேர்ந்த 106 பேர் உள்பட 120 பேர் சிகிச்சை பெற்றதில் இதுவரை 94 பேர் குணம டைந்து வீடு திரும்பியுள்ள னர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வைரஸ் கண்ட றியும் மருத்துவமனையாக கடந்த ஏப்.13-ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இதில் இதுவரை 21,476 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு 30 மணி நேரத்துக்குள் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க வும், ஒருங்கிணைக்கவும் தலைமை மருத்துவர்களை கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோ விந்தராவ் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி முதல் வர் (பொ) எஸ்.மருததுரை, கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் குமுதா லிங்க ராஜ் ஆகியோர் உடனிருந்த னர்.