தஞ்சாவூர், மே 19- கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் அச்சத்தில் இருக்கும் போது, பொருத்தமற்ற நேரத் தில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை நடத்துவதாக எடுத்துள்ள முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த சாமி, மாவட்ட துணைத் தலைவர் பிரபா கரன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வீரையன், பள்ளி மாணவர்கள் உப குழு ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகி யோர் தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்த ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் பள்ளி திறப்பு அறிவிக்கப்படாத நிலையில், இரண்டு மாதங்களாக மாணவர்கள் கல்வி பயி லாமல் இருக்கும் சூழலில், போதிய கால அவகாசம் தராமல், மன உளைச் சலை ஏற்படுத்தும் வகையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும், அரசின் முடிவை கைவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.