tamilnadu

img

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு

அதிரடிக்குப் பெயர் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் மன அழுத்தம் பிரச்சனை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.  இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை சீசனிலிருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் அப்பொழுதே மனஅழுத்த பிரச்சனையில் சிக்கி தவித்தார். அதற்கு அடுத்து நடைபெற்ற சர்வதேச தொடர்களில் திடமாகச் செயல்பட்டும் மனஅழுத்த பிரச்சனையைச் சரி செய்ய முடியவில்லை.    இதனால் இலங்கை அணிக்கெதிரான டி-20 தொடரிலிருந்து விலகி மனநலப் பிரச்சனையை மேக்ஸ்வெல் சரிசெய்யவுள்ளதால், அவருக்குப் பதிலாக டார்சி ஷார்ட் ஆஸ்திரேலிய டி-20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.   மேக்ஸ்வெல் தனது பிரச்சனையிலிருந்து மீண்டு வர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முழு ஒத்துழைப்பதாக கூறியுள்ளது.