அதிரடி பெயர் பெற்ற டென் னிஸ் வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னி யாக்கி (29) அடுத்த மாதம் (2020 - ஜன வரி) மெல்போர்னில் நடைபெறவிருக் கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரோடு சர்வதேச டென்னிஸ் விளை யாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறி வித்துள்ளார். இந்த தொடருக்கு முன்பாக நியூஸி லாந்தின் முக்கிய நகரான ஆக்லாந்தில் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் நடை பெற உள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற விருக்கும் இந்த தொடரில் வோஸ்னி யாக்கி களமிறங்குகிறார்.அதுவும் பிரம் மாண்டமான திட்டத்துடன் களமிறங்கு கிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் தனது தோழியும், கிராண்ட்ஸ்லாம் சாதனை யாளருமான செரீனா வில்லியம்ஸுடன் (அமெரிக்கா) இணைந்து விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார். செரீனா- வோஸ்னியாக்கி ஜோடியாக ஆட இருப்பது இதுவே முதல் முறை என்ப தால் போட்டிக்கான நாளினை குறித்து வைத்து ரசிகர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.