மகளிருக்காக மட்டும் நடத்தப்படும் ஹிரோஷிமா ஓபன் டென்னிஸ் தொடர் சனியன்று தொடங்குகிறது. ஹிரோஷிமா டென்னிஸ் தொடர் சாதாரண டபிள்யு.டி.ஏ (WTA - women’s tennis Association) தொடராக இருந்தாலும், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் அணுகுண்டு வீச்சிற்கு இரையான ஹிரோஷிமா நகரில் போட்டி நடத்தப்படுவதால் இந்த தொடர் பிரபல தொடராகக் கருதப்படுகிறது. மகளிர் ஒற்றையர், இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு குவாலிபையர் ஆட்டம் சனியன்று தொடங்குகிறது.