தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உலக அளவில் 5.53 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா அதிக அளவிலான பாதிப்புகளை கொண்டுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடத்து வருகிறது. சில நாடுகளில் சோதனையில் 90 சதவிகிதம் அளவிற்கு பயனுள்ளதாக உள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் கூறுகையில்,
கொரோனாவிற்கான தடுப்பூசி என்பது தற்போதுள்ள மருந்துகளை பூர்த்தி செய்வதற்குத்தான் மேற்கொள்ளப்படுகிறது. இதுவே, மாற்று மருந்து இல்லை. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்க முடியாது. தடுப்பூசி முதலில் சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த முடியும். முதலில் சுகாதாரத் துறை ஊழியர்கள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயன்படுத்தப்படும். இதனால் பாதிப்பும், இறப்பு விகிதமும் குறையும். ஆனால் அதே சமயம் இதுவே கொரோனா பரவுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே, கொரோனா குறித்து இன்னும் சோதனைகளை தொடர வேண்டும். தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம் என டெட்ராஸ் எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்களின்படி சனிக்கிழமை 6.60 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இது மிகவும் அதிகமாகும். அது போல் கடந்த வெள்ளிக்கிழமை 6.45 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.