tamilnadu

img

ரூ.31.70 லட்சத்துக்கு இரண்டு முலாம் பழங்கள் ஏலம்!

ஜப்பான் நாட்டில் 2 முலாம்பழங்கள் வரலாறு காணாத வகையில்  சுமார் 31 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் யுபாரி நகரிலுள்ள மொத்த விற்பனை சந்தையில் ஆரஞ்சு வண்ண சதைப்பகுதியுடைய முலாம்பழங்களின் ஏலம் நடைபெறுவது வழக்கம் .   இந்நிலையில் சுமார் ஆயிரம் பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், இரண்டு முலாம்பழங்கள்  5 மில்லியன் ஜப்பான் யென்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 31 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.  இனிப்பு சுவை மிக்க ஆரஞ்சு வண்ண சதைப்பகுதி மற்றும் உகந்த பருவநிலையில் விளைந்த பழங்களின் தரம் ஆகிய காரணங்களுக்காக, இவ்வகை முலாம்பழங்களுக்கு அதிக விலை கிடைப்பது வழக்கமென்றாலும், இவ்வளவு பெரிய தொகைக்கும் ஏலம் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிட்டத்தக்கது.  இதைத்தொடர்ந்து இந்த 2 பழங்களும் வரும் 29ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.