ஆத்தூர் அருகே மேம்பால பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வாகனத்துடன் தவறி விழுந்து உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள திருச்செங்கோட்டை சேர்ந்த லோகேஷ் என்பவர் அதிகாலையில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, ஆத்தூர் அருகே ராசிபுரம் சாலையில் மேம்பாலம் பணிக்காக தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் தடுப்புகள் இல்லாத காரணத்தால் இருசக்கர வாகனத்துடன் தவறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இங்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலையில் நடைபெறும் மேம்பால பணிக்காக தோண்டப்படும் பள்ளங்களுக்கு எச்சரிக்கை பலகை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல், இருப்பதால் இது போன்று தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் குற்றம்சட்டியுள்ளனர்.