tamilnadu

img

சேலத்தில் பளு தூக்கும் போட்டி

சேலம், மார்ச் 3- சேலத்தில் ஆக்டிவ் மல்டி ஜிம் மற்றும் சேலம் மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர். சேலம் மாவட்டம், அமானி அடுத்த கொண்டலாம்பட்டியில் உள்ள காட் டூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு ஆக்டிவ் மல்டி ஜிம் மற்றும் சேலம் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சேலம் மாவட்ட அமெச்சூர் பளுதூக் கும் சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்சடை யன் வரவேற்றார். ராஜா, லெனின் முன்னிலை வகித்தார். திமுக பன மரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் போட்டியை தொடங்கி வைத்தார்.
பரிசளிப்பு விழா
இப்போட்டியில் சேலம், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், வாழப் பாடி, ஆத்தூர் உள்ளிட்ட மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதனைத்தொ டர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற் றது. இவ்விழாவில், சேலம் மாவட்டம் பளுதூக்கும் சங்க தலைவர் ஓ.டெக்ஸ்  இளங்கோவன் வரவேற்புரையாற்றி னார். காட்டூர் தேவஸ்தான கமிட் டிச் செயலாளர் மணி தலைமை வகித் தார். மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலையம் தலைவர் தெய்வ பிள்ளை,  மிஸ்டர்தமிழ்நாடு ராஜ கணேஷ், இணைச்செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சண்முகம், மோகன்கு மார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்புஅழைப்பாளராக தமிழ் நாடு வலுதூக்கும் சங்கம் செயல் செய லாளர் நாகராஜன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இந்த போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வு செய் யப்பட்டனர். நிறைவாக இன்டர்நேஷனல் பவர் லிப்ட்டர் சென்ட்ரல் ரயில்வே அச்சு தன் நன்றி கூறினார்.