சேலம், ஆக. 27- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மை மக்கள் நலக்குழு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஸ்தாபக தலைவரான டி.லட்சுமணன் மற்றும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியின் கணவரும், இடதுசாரி சிந்தனையாளருமான விஸ்வநாதன் ஆகியோ ருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் அம்மாசி நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேலம் மாவட்ட குழு மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.ஜெயமாலா தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், சேலம் மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப் பினர் டி.பாலகிருஷ்ணன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐ.ஞானசவுந்தரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாதர் சங்க துணைத் தலைவர் பெருமா, சிபிஎம் தாலுகாகுழு உறுப்பினர் ராம சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.