tamilnadu

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

சேலம், ஏப்.3- சேலத்தில் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக திருநங்கைகள் காவல் நிலையத்தை புதனன்று முற்றுகையிட்டனர். பொய்வழக்குகள் போடுவதாகவும், பொது இடங்களில் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் கூறி, 50க்கும் மேற்பட்டோர் திருநங்கைகள் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களை அவதூறாக பேசுவதற்கு பதிலாக எங்களைக் கருணைக் கொலை செய்து செய்து விடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

;