tamilnadu

திருநங்கை முன்மாதிரி விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

சேலம், பிப்.8- சேலம் மாவட்டத்தில் திருநங்கைக்கு  முன்மாதிரி விருது வழங்கவுள்ளதால், விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மூன்றாம் பாலினத்த வர்களான திருநங்கைகள், தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமை களை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர். இம்மாதிரி முன் னேறிய ஒருவருக்கு, முன்மாதிரி விருது  திருநங்கையர் தினமான வரும் ஏப்ரல் 15ம்  தேதி வழங்கப்படவுள்ளதுஇவ்விருதானது,  ரூ.1லட்சம் காசோலை மற்றும் சான்று  ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  இவ்விருதிற்கான விண்ணப்பங் களை வரும் பிப்.12ம் தேதி மாலை 5 மணிக்குள், சேலம் மாவட்ட சமூக நல  அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதிகளாக, மூன்றாம் பாலினத்தவர்கள், அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது, 5 மூன்றாம் பாலினத்தவர்கள்  முன்னேற அவர்கள் உதவியிருக்க  வேண்டும். நலவாரியத்தில் வாரியத்தில்  உறுப்பினராக இருக்கக்கூடாது. பயோ  டேட்டா, பாஸ்போர்ட் புகைப்படம் 2, சுய  சரிதை,விருது பெற்றிருப்பின் அதன் விபரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம், சேவை  பற்றிய செயல்முறை விளக்கம் புகைப் படங்களுடன் இருத்தல் வேண்டும். சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி களின் தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, அருகில் உள்ள காவல்  நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்ற வியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ப தற்கான சான்று, கையோடு ஆகிய சான்று களை இணைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.