சேலம் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை.
கொரோனா தொற்று பாதித்து சேலம் அரசு மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் .
இவர்களில் நேற்று முன்தினம் 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மீதி 17 பேர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர் .
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 3 பேர் குணமானார்கள்.
இதனையடுத்து 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர் .
சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன்,
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால்,
சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் நிர்மல்சன் மற்றும் டாக்டர்கள் குழுவினர் மூன்று பேருக்கும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர் .
அப்போது மூன்று பேரும் செய்தியாளர்களிடம்,
மருத்துவ குழுவினர் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர்.
இதனால் நாங்கள் குணமடைந்து விட்டோம். மருத்துவர்களுக்கு எங்களது நன்றி என மூன்று பேரும் தெரிவித்தனர் .
பின்னர் மூன்று பேருக்கும் மருத்துவ குழுவினர் வீட்டில் 14 நாட்களுக்கு தனியறையில் இருக்க வேண்டுமென்றும்,
யாருடனும் நெருங்கி பேச வேண்டாம் என்றும் அறிவுரை கூறி வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தனர்.
இன்று மாலை 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் 14 பேர் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது