tamilnadu

இளம்பிள்ளையில் கொரோனாவுக்கு முதல் பலி

இளம்பிள்ளை, ஆக. 4- சேலம் மாவட்டம், இடங் கணசாலை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட காடை யாம்பட்டி பகுதியைச் சேர்ந் தவர் லோகநாதன் (68). காடையாம்பட்டி பகுதி யில் மளிகைக் கடை நடத்தி வரும் இவருக்கு, கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலை யில், ஞாயிறன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம்பிள்ளை அருகே கொரோனா வைரஸ் தொற் றுக்கு ஒருவர் முதல் பலி யான சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

;