tamilnadu

சேலம் லீ பஜார் பாலத்தை திறக்க நடவடிக்கை எடுத்திடுக நெல் அரிசி விற்பனையாளர் சங்கம் கோரிக்கை

சேலம்,செப்.19- சேலம் லீ பஜார் பாலத்தை உடனடியாக திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமென நெல் அரிசி உணவு பொருட்கள் மொத்த விற்பனையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  சேலம் செவ்வாய்பேட்டை நெல் அரிசி உணவு பொருட்கள் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் 46 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சேலம் 3 ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், சேலம் மாநகரில்  உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலைகளை செப்பனிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், லீ பஜார் மேம்பாலம் 7 ஆண்டுகளாக கட்டுமான பணிகளை முடிக் காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டதாக நெல் அரிசி உணவுப் பொருள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்திரசேகரன் தெரி வித்தார்.