சேலம், நவ.14- தமிழகம் முழுவதும் தெருவோர உணவு வியாபாரி களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி அளித்து மாவட்டம் தோறும் பாதுகாக்கப்பட்ட உணவு வழங்கும் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய தென்மண்டல இயக்குனர் முத்துமாறன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி தொடர்பான சிறப்பு கருத்த ரங்கம் சேலத்தில் புதனன்று நடைபெற்றது. இந்த கருத்த ரங்கினை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய தென்மண்டல இயக்குனர் முத்துமாறன் தொடங்கி வைத்து பேசியதாவது, மத்திய அரசு விரைவில் உணவு பாது காப்பு தொடர்பான முக்கிய வரைவு அறிக்கையை வெளி யிட உள்ளது. பள்ளி வளாகங்களில் பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்கள் மட்டுமே விற்கப்படுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விவசாயிகள் முதல் தொழில் முனைவோர், விற் பனையாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரி வித்து முறையாக பயிற்சி அளிக்கப்படும். பொதுமக்கள் பெரும்பாலானோர் நடைபாதை உணவு கடைகள் மற்றும் திறந்த வெளி உணவு கடைகளிலும் உணவு உட்கொள்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரு வோர மற்றும் நடைபாதை உணவு வியாபாரிகளை தேர்ந் தெடுத்து அவர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக முறையான பயிற்சி அளித்து பாதுகாக்கப்பட்ட உணவு வழங்கும் மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட உணவு உட்கொள்வது உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் இளவரசன், தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.