சேலம், மார்ச் 14- பெண் உரிமையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தோழி கூட்டமைப்பு சார்பில் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சனியன்று கருத்தரங்கம் நடைபெற்றது. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தோழி கூட்டமைப்பு சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்த ரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.பர மேஸ்வரி தலைமை வகித் தார். இதில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், பெண் உரிமையைப் பாது காப்போம், வன்முறையை வேரறுப்போம் என கருத் துரையாற்றப்பட்டது.இதில் மாதர் சங் கத்தின் மாநில செயலாளர் ஏ.ராதிகா, தோழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அலமேலு, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி ஆகியோர் கருத்துரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பெருமா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.