tamilnadu

சேலம்: இரு பெண் குழந்தைகள் கொலை தாய் தற்கொலை முயற்சி

சேலம், பிப்.8- சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகில்  இரு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற் கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே யுள்ள மூலசெங்காடு கிராமத்தை சேர்ந்தவர்  இளையராஜா (35). நெல் அறுவடை இயந்திர பங்குதாரராக உள்ளார். இவருக்கு  திவ்யா (30) என்ற மனைவியும், வார்னிகா (3), தான்சிகா (2) என இரு மகள்கள் உள் ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சனியன்று காலையில் விவ சாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தனது  இரு பெண் குழந்தைகளை வீசி யுள்ளார். தண்ணீரில் வீசப்பட்ட இரு  குழந்தைகளும் மூச்சு திணறி உயிரி ழந்தது. பின்னர் திவ்யாவும் கிணற்றில்  குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் கிணற்றில்  இருந்து அலறல் சத்தம் போட்டுள்ளார்.  இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து  பார்த்துள்ளனர். அப்போது உயிருக்காக  போராடிய திவ்யாவை மீட்டு தம்மம்பட்டி  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி  வைத்தனர். இதையடுத்து கிணற்றில்  சடலமாக கிடந்த இரு குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டன. பின்னர் குழந்தைகளின் சடலத்தை சேலம்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

;