ஏற்காடு, செப். 12- சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வர் சதாசிவம் (70). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி யன்று காணாமல் போனதாக அவரின் உறவினர்கள் கன் னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தைத் தேடி வந்தனர். இந்நிலையில், கன்னங்கு றிச்சி பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் உடல் சிதைந்த நிலையில் எழும்பு கூடாக பிரேதம் ஒன்று இருந்துள்ளது. இந்த உடல் சதாசிவம்தான் என்பதை உறுதிப்படுத்திய உறவினர்கள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
ஆனால், உடல் கிடந்த இடம் ஏற்காடு காவல் எல்லைக்குட்பட்டதால், அங்கு புகார் கொடுக்க அறி வுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சதா சிவத்தின் உறவினர்கள் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று எழும்பு கூட்டை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.