சேலம், டிச.16- சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஆவது வார்டு ஒன் றிய உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளராக கே.ராஜாத்தி,10-ஆவது வார்டு உறுப்பினருக்கு எஸ். கவிதா, எடப்பாடி ஒன்றிய குழு 4-வது வார்டு உறுப்பி னருக்கு நடராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த னர். இதேபோல் கல்வராயன்மலை ஒன்றியக் குழு 3-ஆவது வார்டு உறுப்பினராக பூச்சியம்மாள் பொட்டி, கொங்கணா புரம் ஒன்றியம் 8வது வார்டு உறுப்பினராக எஸ்.லட்சுமி ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சன்னி யாசி பெட்டி ஊராட்சி தலைவர் வேட்பாளராக எஸ்.கே.சேகர், கல்வராயன் மலை ஒன்றியம் கீழ் நாடு பஞ்சாயத்து தலை வருக்கு விஜயசாந்தி முருகேசன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றி யம் ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு பி. பெரியசாமி, ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சி தலைவருக்கு ஆறுமுகம், பனமரத்துப்பட்டி ஒன்றி யத்தில் உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி தலை வருக்கு சாமியப்பன், சேலம் ஊராட்சி ஒன்றியம் தளவாய் பட்டி ஊராட்சி தலைவராக ஜெயக்குமார் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.