tamilnadu

img

சேலம் : காவல் ஆய்வாளரை கைது செய்திடுக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம், ஆக. 11- சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளரை கைது செய்யக்கோரி சாலையோர வியாபாரி மற்றும் அவ ரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாநகரம் சின்னக்கடை வீதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி ஊரடங்கை மீறி கடை வைத்திருந்ததா கக் கூறி எழுமிச்சை பழ வியாபாரி வேலுமணி என்ப வரை சேலம் டவுன் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த வேலுமணியின் தாய் பாலாமணி தனது மகனை விட் டுவிடுமாறு கேட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந் தார். இதனையறிந்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற் கொண்டனர். ஆனால், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்காததால்,  சேலம் டவுன் காவல் ஆய்வாளர் குமாரை கைது செய்ய வேண்டும் என வேலுமணியின் உறவினர்கள், வியாபாரி கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்.

 

;