tamilnadu

சேலம், தருமபுரி முக்கிய செய்திகள்

சேலத்தில் சாரல் மழை                                                                                                                                         

சேலம், ஆக.18- சேலம் மாநகரில் ஞாயிறன்று சாரல் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கேரளா, கர்நாடகாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் 10 நாட் களுக்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் வெப்ப சலனம் காரணமாக, உள் மாவட்டங்களிலும் ஓரளவு  மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளியன்று கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து ஞாயிறன்று அதிகாலை முதலே மாநகரில் சாரல் மழை  பெய்தது. இதேபோல் ஏற்காடு, ஆணைமடுவு, காடை யாம்பட்டி, ஓமலூர் பகுதியிலும் மழை கொட்டியது. அதிக பட்சமாக ஏற்காட்டில் 26 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் ஞாயிறன்று காலையில் பெய்த மழையின் அளவு வருமாறு, ஏற்காடு 26, ஆணைமடுவு 10, காடையாம்பட்டி 9, ஓமலூர் 2, சேலம் 0.4 என மொத்தம் 47.4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

தருமபுரி, ஆக.18- அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் கழிவு நீர்  கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட தெருக்கள்  உள்ளன.  இதில் இரண்டு தெருக்களில் மட்டுமே கழிவு நீர்  கால்வாய் வசதிகள் உள்ளன. மற்ற பகுதிகளில் கழிவு  நீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால், மழைக் காலங் களில் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்குகிறது.  அதேபோல், எல்லப்புடையாம்பட்டியில் புதிய காலனிக்கு செல்லும் சாலையில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலைஉள்ளது.  எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், எல்லப்புடையாம் பட்டியில் கழிவு நீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.