மாணவ, மாணவிகள் அறிவியல் சுற்றுலா
சேலம், அக். 9-சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவி யர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதன் முறையாக திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்க ளுக்கு அறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்பட் டனர். சேலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவி கள் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், தும்பா ராக்கெட் ஏவுதள மையம் ஆகிய இடங்க ளுக்கு அறிவியல் சுற்றுலா சென்றுள்ளனர். இதற் கான ஏற்பாட்டை சேலம் டார்வின் அறிவியல் கழகம் செய்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மாணவ மாணவிய ருக்கு அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் இருந்து 219 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவியல் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் நோக் கில் அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. பேருந்துகள் மூலம் சுற்றுலா பயணம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் உள்ள அறிவி யல் மையத்தில், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் உரைகளை நேரடியாக கேட்கவும் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாணவ, மாண வியர் கூறுகையில், பள்ளியில் படிக்கும் போது அறிவியல் சுற்றுலா செல்வது மிகப்பெரிய மகிழ்ச் சியை ஏற்படுத்துகிறது. மேலும் அறிவியல் துறை சார்ந்த சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் நேரடி யாக விளக்கங்கள் அளிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் எதிர்காலத் தில் நாங்களும் சிறந்த விஞ்ஞானிகளாக வளர்ந்து நாட்டிற்கு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை வழங்குவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என தெரிவித்தனர்.
பழங்குடியின முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிடுக மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
பொள்ளாச்சி, அக். 9- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் வசிக்கும் பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான உதவித்தொகை மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, மலைவாழ் மக்கள் சங்கத் தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வயது மூப்படைந்த பழங் குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 200 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையானது தற் போது வரை வழங்கப்படவில்லை. இது தொடர் பாக பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவ டிக்கையுமில்லை. எனவே, இம்மனுக்கள் மீது உடனடியாக நடவ டிக்கை எடுத்து மாதாந்திர உதவித்தொகை தடையின்றி வழங்க வேண்டும். இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து தீர்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து அரசால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளை ஆனைமலை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக் கும் போராட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை எதிரொலி பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
கோவை, அக்.9- ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையின் எதிரொலியாக பட்டுக்கூடுகள் விலை குறைந்துள் ளது. தமிழகம் முழுவதும் 20 அரசு பட்டுக்கூடு அங்காடி கள் செயல்படுகின்றன. கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவல கத்தில் பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. பட்டுக்கூடு அங்காடிக்கு வரும் நூற்பாளர்கள் விவ சாயிகளிடம் இருந்து கூடுகளை வாங்கி பட்டுநூலாக திரித்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பட்டுநூல் பரிமாற்றகத்திற்கு விற்பனைக்கு வழங்குவர். இந்த பட்டு நூல்கள் ஏலம் முறைப்படி நெசவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பட்டாடைகள் தயா ரிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் போதிய விலை கிடைக் காமல் பட்டு விவசாயிகள் அவதியடைந்து வந்தனர். இந்த சூழலில், பட்டுநூல் விலை கடந்த செப்டம்பர் மாதம் அதிகரித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையான பட்டுக்கூடுகள், இம்மாத தொடக்கத்தில் ரூ.500 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களை முன்னிட்டு கோவையில் உள்ள 10 நூற்பாளர்களும் தங்களது பணியை நிறுத்தினர். இதன் காரணமாக பட்டுக்கூடு விற்பனை தேக்க மடைந்தது. இதனால் பட்டுக்கூடுகள் மீண்டும் விலை குறைந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ பட்டுக்கூடு சராசரியாக ரூ.414க்கு ஏலம் போனது. நூற்பாளர்கள் மீண்டும் பணியை துவங் கிய நிலையில், கூடுகள் விலை மீண்டும் குறைய வாய்ப்பு இல்லை என்று பட்டு வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.