tamilnadu

img

ஓமலூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கம்

சேலம், நவ. 4- ஓமலூர் அருகே தும்பி பாடி ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தார்ச் சாலை, ஜல்லி சாலை மற் றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணிகள் துவங் கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓம லூர் அருகேயுள்ள தும்பி பாடி ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்நது தும்பிபாடி காலனி, முள்ளு செட்டிப்பட்டி, சக்கரை செட்டியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தார்ச்சாலை, ஜல்லிச்சாலை மற்றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணியை ஓமலூர் சட்ட மன்ற உறுப்பினர் வெற்றிவேல் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலை வர் எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஆசைதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.