tamilnadu

img

இளம்பிள்ளையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- பொதுமக்கள் அச்சம்

இளம்பிள்ளை, அக்.12-  இளம்பிள்ளை சுற்றுவட் டாரப் பகுதியில் கொரோனா தொற்றின் வேகம் அதிக ரித்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ள னர்.  சேலம் மாவட்டம், இளம் பிள்ளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெசவுத் தொழில் பிரதானமாக இருந்து வருகி றது. இதனால் வெளி மாவட் டம், வெளி  மாநிலங்களிலி ருந்து ஜவுளி வாங்குவதற் காக தினந்தோறும் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இதே போல், இளம்பிள்ளையில் இருந்து ஜவுளி வியாபாரிகள் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று வருவதால் இளம்பிள்ளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் விளைவாக சாதா ரண காய்ச்சலுக்குகூட அச்சமடைந்து தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது.

 மேலும், இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கீரப் பாப்பம்பாடி, பெருமகௌண்டம்பட்டி, இளம்பிள்ளை, வேம்படிதாளம் ஆகிய பகுதி களில் இதுவரை 136 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி உள் ளன‌ர். இதில் 119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது அரசு மற் றும் தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில், இளம்பிள்ளை பேரூ ராட்சி செயல் அலுவலர், பில் கலெக்டர்  ஆகிய இருவருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் இளம்பிள்ளை சுற்றி யுள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச் சம் ஏற்பட்டுள்ளது.