tamilnadu

img

நீரோடை ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி

இளம்பிள்ளை, நவ.8- இளம்பிள்ளையில் நீரோடை ஆக் கிரமிப்பால் சாலையெங்கும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிய டைந்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை யில் வெள்ளியன்று மாலை கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, இளம்பிள்ளை - காக்காபாளையம் செல்லும் சாலையில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் மாரியம் மன் கோவில் திடலில் நடைபெற்ற வாரசந்தைக்கு வந்த சந்தை வியாபாரி கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், இளம்பிள்ளையில் கனமழை பெய்யும் பொழுதெல்லாம்  இப்பிரச்சினை வழக் கமானதாக மாறி  வருகிறது. சில நேரங் களில் வீடு, கடைகளில் கூட தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதற்கு காராணம் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு செல்லும் நீரோடைகளின் ஆக்கிரமிப்பு தான் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.  முன்னதாக, இங்குள்ள ஏரியில் சுமார் இரண்டரை கோடியில்  திடக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட் டம் தமிழகத்திலேயே முதல்முறை யாக தொடங்கப்பட்டது. ஆனால், இதன்பின் அப்பணிகள் பல ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கன மழை பெய்தும் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் நீடித்து வருகி றது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள் ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அரசு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது  மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.