இளம்பிள்ளை, பிப்.20- வேம்படிதாளம் இரயில்வே தரைவழிப் பாலத்தில் அடிக்கடி விபத்து மற்றும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் இருவழிப் பாதையாக மாற்ற வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியில் சேலம் - கோவை ரயில்வே தரைவழிப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைவழிப் பாலத் தில் அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்பு களும், போக்குவரத்து நெரிசலும் ஏற் பட்டு வருகிறது. இதன் வழியாக காக்கா பாளையம், மகுடஞ்சாவடி, நடுவனேரி, பெருமாகவுண்டம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை, ஆட்டையாம்பட்டி, ராசி புரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது. இப்பாலமானது, கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டு,இருவழிப் பாதையாக இருந்தது. தற்சமயம் ஒரு வழியில் மட்டும் பொதுமக்களும், வாக னங்களும் சென்று வருகின்றன. மற்றொரு பாதையில் சாக்கடை நீர் செல்கிறது. இதனை சரிசெய்து இருவழிப் பாதையாக மாற்றி தருமாறு வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.