tamilnadu

img

விஷம் கலந்த இறைச்சியை உண்ட வளர்ப்பு பிராணிகள் பலி

சேலம், ஏப்.25-வாழப்பாடி அருகே விஷம் கலந்துவீசப்பட்ட இறைச்சியை உண்ட நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில் வசிப்பவர் குமார். இவர் வளர்த்து வந்த ஆட்டை மர்ம விலங்குகடித்து கொன்று விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் குருணை மருந்தை இறைச்சியுடன் கலந்து தெருக்களில் வீசியதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் திரியும் 50க்கும் மேற்பட்ட வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை, பன்றி, பறவைகள் உள்ளிட்டவை உண்ட நிலையில் அவைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;