tamilnadu

img

முதியோர் உதவித்தொகையை முறையாக வழங்கிடுக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், செப். 23 - முதியோர் உதவித்தொகையை முறையாக வழங்க வலி யுறுத்தி பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு முதியோர் உதவித்தொகையை முறை யாக வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜாத்தி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மேலும் தாலுகா செயலாளர் கே.பெருமா, தன லட்சுமி, மேதினம் சுமதி, துளசியம்மா உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  இப்போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தினமும் 10 பேருக்கு ஆன்லைனில் பதிவு செய்து, முதியோர் உதவித்தொகை வழங்க பரிசீலிக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

;