சேலம், அக். 3- தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வறண்ட ஏரிக்கு தண்ணீர் விட கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத தால், வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் தண்ணீர் குழாய் அமைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், வீராணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆறுமுகம். கடந்த பல ஆண்டுகளாக ஜருகுமலை மற் றும் ஏற்காடு அடிவாரத்தில் இருந்து வெளி யேறும் மழை நீர் சாக்கடை கால்வாயில் கலந்து வீணாக செல்வதையறிந்த ஆறு முகம், இந்த கால்வாயில் இருந்து குழாய் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவெடுத்தார். இதை செயல்படுத்த போதிய நிதி ஆதாரத்தை மாவட்ட நிர்வா கத்திடம் கேட்டும் கிடைக்கவில்லை.
இத னால், தனது சொந்த முயற்சியின் காரண மாக சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 1000 மீட்டர் தொலைவில் குழாய் அமைத்து கால் வாயில் இருந்து தண்ணீரை ஏரிக்கு கொண்டு வந்தார். காந்தியின் பிறந்த நாளான வெள்ளியன்று ஏரியில் தண்ணீர் நிரப்பும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதுகுறித்து வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் கூறிகையில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீராணம் ஏரி சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவுள்ள விவ சாய விளை நிலங்களுக்கு பாசன வச தியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, குடி மராமத்து பணியும் இந்த ஏரிக்கு கொடுக் கப்படாததால் ஏரியில் முட்புதர்கள் ஆக காட்சியளிக்கிறது. இதனால் சமூக ஆர்வ லர்களின் உதவியுடன் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளேன் என கூறி னார். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களி டையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.