சேலம், அக்.16- சேலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்ற டெங்கு குறித்து விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. தமிழகத்தில் தற்பொழுது டெங்கு உள்ளிட்ட பல் வேறு காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இப்பேரணி சேலம் காந்தி சாலை பகுதியில் தொடங்கி அஸ்தம்பட்டி, இட்டேரி சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. இந்த பேரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் டெங்கு தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.