tamilnadu

img

நவ. 26 பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சூளுரை

சேலம், நவ.7- நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை சேலத்தில் வெற்றிகரமாக்குவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  சேலத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று ஐஎன்டியுசி அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வடமலை, மாவட்ட செயலாளர் நடராஜன், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனியப்பன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் மணி, மாநில துணைத் தலைவர் பி.கணேசன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

இதில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத் தத்தை சேலத்தில் வெற்றிகரமாக்க அனைத்து தொழிலாளர்களின் பங்க ளிப்பையும் உறுதி செய்வது. இந்த வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை விளக்கி எதிர்வரும் நவ.17 ஆம் தேதியன்று சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது. மக்கள் கூடு கின்ற இடங்களில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்குகளை விளக்கி துண்ட றிக்கைகளை வினியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.