இளம்பிள்ளை, நவ.18- சேலம் உருக்காலை நிர்வாகத்தின் சார்பில் கே.கே.நகரில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவில் ரூ. 44 லட்சம் செலவில், புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட் டது. சேலம் மாவட்டம், சங்க கிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்கணசாலை பேரூராட்சி கே.கே.நகர் பகுதியில் ஒரு லட்சம் கொள் ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மூலம் 3-வார்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. தற்போது வரை அப்பகுதி மக்களுக்கு நேரடியாக காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் சேர்த்து வைத்து வினியோகம் செய்ய முடியாமல் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . இதுகுறித்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பிர் ஏ.கே.பி.சின்ராஜிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கே.கே.நகர் பகுதியில் உள்ள மக்கள் உருக்காலைக்கு நிலம் கொடுத்து உதவியதன் அடிப்படையில், சேலம் உருக் காலை நிர்வாகத்திடம் நாமக்கல் எம்.பி., நேரில் சென்று கோரிக்கை வைத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து சேலம் உருக்காலை (ஜெயில்) மூலம் கே.கே. நகர் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.கே.பி.சின்ராஜ் பங்கேற்று பணி களை துவக்கி வைத்தார். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.