tamilnadu

img

சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்திடுக- கிராம மக்கள் கோரிக்கை

சேலம், மே 28 -ஏற்காடு அருகே உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், வெள்ளக்கடை கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை சுகாதார வளாகத்திற்கு மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இதனை மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. மேலும், சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்புள்ளதாகவும், சுகாதார வளாகத்தை சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;